Search

திருச்சி நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை

Tuesday 19 March 2019


திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 25 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 இந்த பணிகளில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நிறுவனம்: திருச்சி மாவட்ட நீதிமன்றம்
பணி: அலுவலக உதவியாளர்
காலிபணியிடங்கள்: 25


பணியிடம்: திருச்சி


தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி


வயது வரம்பு; 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு


சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரை


தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.03.2019



இந்த பணிகளில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://districts.ecourts.gov.in/india/tn/tiruchirappalli/recruit வலைதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து திருச்சி தலைமை குற்றவியல் நடுவர், தலைமை குற்றவியல் நீதிமன்றம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620 001 என்ற முகவரிக்கு தபால் மூலம் 20.3.2019 க்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.


 ஏற்கனவே விண்ணப்பம் அனுப்பியவர்கள் மீண்டும் அனுப்ப தேவையில்லை. மீறி அனுப்பினால் இரண்டு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
இது குறித்து முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்:

 https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification_92.pdf

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One