Search

ESIC காப்பீட்டு நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்

Tuesday 12 November 2019

மத்திய அரசு நிறுவனமான அரசு ஊழியர் காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐசி) காலியாக உள்ள உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பணியிடங்களை ஓப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஓய்வுபெற்றவர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்

நிறுவனம்: அரசு ஊழியர் காப்பீட்டு நிறுவனம் (ESIC)

பணி: Assistant Engineer

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம், பட்டயம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.




சம்பளம்: மாதம் ரூ. 45,000

பணி: Junior Engineer

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம், பட்டயம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.33,630

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதுவரம்பாக 64க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெறும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.




பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Additional Commissioner and Regional Director, ESI Corporation, Regional Office, 143, Sterling Road, Nungambakkam, Chennai - 34

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.esic.nic.in/attachments/recruitmentfile/ce28d0948724efaaf1a6323864209fd7.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.11.2019

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One