Search

ஆதிதிராவிடர் மாணவியர்களுக்கும் வங்கிக் கணக்கு எண் துவக்க நடவடிக்கை மேற்கொள்வது பள்ளிகளுக்கு சுற்றறிக்கை!

Thursday 9 July 2020

2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்க தகுதியுள்ள அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியர்களுக்கும் வங்கி கணக்கு எண் துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே , அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் , வட்டார கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு இச்சுற்றறிக்கையை அனுப்பவும். வங்கி கணக்கு எண் துவக்கப்பட்டுள்ளதா என்பதை அவ்வப்போது தொடர்ந்து கண்காணித்து அறிக்கை அனுப்பிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் , 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்க தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர்கள் விவரங்கள் இணைப்பில் காணும் படிவத்தை பூர்த்தி செய்து இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One