Search

நோட்டீஸ் வந்தால் நேரில் வரவேண்டாம் வரித்துறை தகவல்!

Wednesday 22 July 2020

நோட்டீஸ் வந்தால் நேரில் வரவேண்டாம் வரித்துறை தகவல் புதுடெல்லி வருமான வரித் துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால் பெரும்பாலானோர் பதற்றமாகி விடுகின்றனர் .

அப்படி நோட்டீஸ் வந்தால் பதற்றம் அடைய தேவையில்லை . அதேபோல் உடனே அருகில் உள்ள வருமான வரித் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை .

இணைய தளம் மூலம் உங்களுடைய நோட்டீஸுக்கான விளக்கத்தை வழங்கலாம் என வருமான வரித் துறை கூறியுள்ளது . மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தியபடி இணையதளம் மூலமாக வருமான வரிக் கணக்கை மதிப்பீடு செய்யும் நடைமுறை கடந்த அக்டோபரில் அமல்படுத் தப்பட்டது .

இந்த நடைமுறையின் மூலம் வருமான வரிக் கணக்கு தொடர்பாக இதுவரை 58,319 வழக்குகளை விசாரிக்க அதி காரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் . இவற்றில் இதுவரை 7,116 வழக்குகள் இணையதளம் மூலமாகவே தீர்வு காணப் பட்டுள்ளது .

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One