Search

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு

Friday 19 August 2022

முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதிகளை தமிழ்வழியில் பயின்று உள்ளதாக தெரிவித்துள்ள விண்ணப்பபதாரர்கள் அதற்குரிய ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்கவில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது .
இருந்தாலும், கடைசி வாய்ப்பாக ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் தமிழ்வழியில் பயின்றதற்கான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிப்புக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடந்தண்டு செப்டம்பர் மாதம், 2020-21 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குநர் நிலை 1/ கணினி பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தாண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று வெளியிடப்பட்டன.

தற்போது விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அறிவிக்கையின் போது முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்று உள்ளதாக சில விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அதற்குரிய ஆவணங்களை விண்ணப்பிக்கும் போது முறையாக பதிவேற்றம் செய்யவில்லை. எனவே முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், 1ம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு 11-12ம் வகுப்பு, டிப்ளமோ படிப்பு, இளங்கலைப் பட்டம் (UG Degree), முதுகலைப் பட்டம் (PG Degree) கல்வியியல் இளங்கலைப் பட்டம் (B.Ed. Degree) மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலை (B.Ed. Degree மற்றும் MPEd. Degree) என தாங்கள் தமிழ்வழியில் பயின்றதற்கான அனைத்து ஆவணங்களையும் உரிய அலுவலரின் ஒப்புதல் பெற்று அறிவிக்கையில் தெரிவித்துள்ளவாறு உரிய படிவத்தில் பெற்று சமரிப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.


1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் படிவம்


இதர வெவ்வேறு படிப்புகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் படிவம்



விண்ணப்பத்தில் ஏற்கனவே, தமிழ்வழி ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை 'ஆம்' என பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இவ்வாய்ப்பு வழங்கப்படும். எனவே, மனுதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் உள்ள இவ்விவரத்தினை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இணையதளத்தில் உரிய மாதிரிப் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 25ம் தேதி பிற்பகல் 5 மணி வரை வாய்ப்பு அளிக்கப்படும்.

இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.

Click here to join WhatsApp group for Daily employment news 

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One