Search

நெல்லை இளைஞர்களே.. சமூகநல அலுவலக உதவியாளர் பணிக்கு உடனே அப்ளை பண்ணுங்க!

Monday 10 July 2023

 சமூக நல அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு நெல்லையில் சமூக நல அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ள ஒரு இளநிலை உதவியாளர் பணிக்கு இம்மாதம் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருநெல்வேலி மாவட்ட சமூக நலன் அலுவலகத்தில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005ன் கீழ் இளநிலை உதவியாளர் தட்டச்சர் பணியிடம் ஒன்று12000 தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.35 வயதுக்குள் இருக்க வேண்டும் . தமிழ் ஆங்கிலத்தில் தட்டச்சு கீழ்நிலை மேல்நிலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். கணினி பயன்பாட்டினை அறிந்தவராக இருத்தல் வேண்டும்.

மாவட்ட சமூக நல அலுவலர் , மாவட்ட சமூக நல அலுவலகம், திருவனந்தபுரம் சாலை, சுப்பிரமணியபுரம் தெரு , வ உ சி மைதானம் எதிரில், பாளையங்கோட்டை என்ற முகவரிக்குஇம்மாதம் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One