Search

குரூப்-2 தேர்வுக்காக பொது தமிழ் நூல்களும் ஆசிரியர்களும் முக்கிய குறிப்புகளும்

Sunday 16 September 2018

1. என் கடன் பணி செய்து கிடப்பதே - திருநாவுக்கரசர்

2. உடலை வளர்ப்பது உணவு ; உன்னையும் உயிரையும் வளர்ப்பது தமிழே ! --- பாரதிதாசன்

3. பாட்டுக்கொரு புலவன் பாரதி என்று புகழ்ந்தவர் -- கவிமணி தேசிய விநாயகனார்

4. ' வாக்குண்டாம் ' என்று கூறப்படும் நூல் மூதுரை -- ஒளவையார்

5. முக்கூடற்பள்ளு -- என்னாயினாப்புலவர்

6. பங்கயம் -- தாமரை
  பாசடை -- பசுமையான இலை

7. ' உப்பில்லாக் கூழிட்டாலும் உண்பதே அமிர்தமாகும் ' - விவேக சிந்தாமணி

8. வடமொழியில் உள்ள வெங்கடேச சுப்ரபாதத்தை தமிழ் மொழியில் பெயர்த்தவர் -- ச.பார்த்தசாரதி

9. இயற்கை பேரரசி ( சாகுந்தலம் நாடக மொழி பெயர்ப்பு நூல் ) -- ச. பார்த்தசாரதி

10. மலரும் மாலையும் , மருமக்கள் வழி மான்யம் , குழந்தைச்செல்வம் , ஆசிய ஜோதி , தேவியின்கீர்த்தனைகள் -- கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை
 ( தேரூர்)

11. ' தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு ' -- மலரும் மாலையும் -- கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை

12." தேசியம் காத்த செம்மல் " என்று
 திரு.வி க - வால் பாராட்டப்பட்டவர் -- பசும்பொன் முத்துராமலிங்கம்

13. " ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் " -- கொன்றை வேந்தன்

14. " யாதும் ஊரே யாவரும் கேளிர் " -- புறநானூறு

15. திராவிட சிசு -- திருஞானசம்பந்தர்

தொண்டர்சீர்பரவுவார் -- சேக்கிழார்

16. திருஇரட்டை மணிமாலை -- காரைக்கால் அம்மையார்

17. பிசிராந்தையார் -- கோப்பெருஞ்சோழன்

பெருஞ்சித்திரனார் -- குமணன்

18. சைவச்செல்வி -- மங்கையர்கரசி

19. கடையெழு வள்ளல்களின் ஈகைச் சிறப்பைக் கூறும் நூல்-- சிறும்பாணாற்றுப்படை

20. களவழி நாற்பதி --- போர் பற்றி கூறும் நூல் ( சோழன் செங்காணன் )

21.மிகப் பெரியது --  மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்

மிகச் சிறியது - முல்லைப்பாட்டு -- நப்பூதனார்

22. உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனப்படுவது --- சிலப்பதிகாரம்

23. தமிழ் உரைநடையின் தந்தை -- வீரமாமுனிவர்

24.திருக்குறளை இலத்தீன்  மொழியில் பெயர்த்தவர் -- வீரமாமுனிவர் ( அறம் , பொருள் மட்டும் )

25. உமறுப்புலவரை ஆதரித்தவர் -- வள்ளல் சீதக்காதி

சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர் -- கம்பர்

26. தேம்பாவணி ஏசுகிறிஸ்துவின் தந்தை சூசையப்பரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல் -- வீரமாமுனிவர்

27. உத்தர ராமாயணம் பாடியவர் -- ஒட்டக்கூத்தர்
28. நரிவிருத்தம் ( அறநெறி பேசும் நூல் ) -- திருத்தக்கத்தேவர்

29. ' பித்தா பிறைசூடி ' ,
' பொன்னர் மேனியனே ' -- சுந்தரர்

30. பத்துப்பாட்டில் அகமா ? புறமா? என்ற விவாததுக்கு உரிய நூல் -- நெடுநெல்வாடை

31. புறப்பொருள் வெண்பாமாலை -- ஐயனாரிதனார்

32. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர் -- சேனாவரையர்

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் -- அடியார்க்கு நல்லார்

33. கரித்துண்டு -- மு. வரதராசனார்

மரப்பசு -- ஜானகிராமன்

பொன்னகரம் -- புதுமைப்பித்தன்

தமிழன் இதயம் -- நாமக்கல் இராமலிங்கம்

34. சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன் -- இயற்பெயர் விருத்தாசலம்

35. ' தென்னாட்டு தாகூர் ' -- வேங்டரமணி ( தேசபக்தன் கந்தன் நாவலை வெளியிட்டவர் )

36. உததரவேதம் -- திருக்குறள்

திராவிட வேதம் -- திருவாய்மொழி

37. எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே -- புறநானூறு -- ஒளவையார்

38. உரைநடையின் முன்னோடி -- இராபர்ட்- டி- நொபிலி ( தத்துவபோதகர் )

39. தமிழ் உரைநடையின் தந்தை -- வீரமாமுனிவர் ( தைரியநாதர்)

இருபதாம் நூற்றாண்டு உரைநடையின் தந்தை -- திரு.வி.க

40.யாப்பு அடிப்படையில் தொகுக்கப்பட்ட நூல் -- குறிஞ்சிப்பாட்டு

41.என் சரித்திரம் -- உ.வே.சாமிநாதையர்

42. கரிசல் கதைகளின் தந்தை -- கி.ராஜநாராயணன்

43. தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர் -- வீரமாமுனிவர்

44. குளத்தங்கரை அரசமரம் -- வ.வே.சு.ஐயர் ( மங்கையர்க்கரசியின் காதல் எனும் கதைத் தொகுப்பிலிருந்து வெளி வந்தது )

45. காளிதாசரின் சாகுந்தலத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் -- மறைமலையடிகள் ( வேதாச்சலம் )

46.சேர மன்னர்களின் வரலாற்றைக் கூறும் நூல் -- பதிற்றுப்பத்து

47. தமிழில் தோன்றிய முதல் தொடர் கதை -- கமலாம்பாள் சரித்திரம் ( 1896) -- ராஜம் ஐயர்

தமிழில் தோன்றிய முதல் புதினம் -- பிரதாப முதலியார் சரித்திரம் ( 1876) -- மாயூரம் வேத நாயகம் பிள்ளை

புதினம் எனப் பெயரிட்டவர் -- ரிச்சர்ட்சன்

48. கொங்குவேள் மாக்கதை -- பெருங்கதை ( கொங்குவேளிர்) -- சமண சமய நூல் -- உதயணன் பாத்திரம் இடம் பெற்றுள்ளது

49. காந்தி புராணம் -- பண்டித அசலாம்பிகை ( 20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் )

50. 'மணிமிடை பவளம் ' என்பது அகநானூற்றில் ஒரு பாடல் பகுதிக்குப் பெயராகும்

மணிப்பிரவாளம் என்பது ( மணிப்பவழ நடை ) ஒரு வகைக் கலவை நடை ( வடமொழிச் சொற்கள் கலந்த தமிழ் உரைநடை )

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One