Search

TNPSC |TRB | TET |CIVICS STUDY MATERIALS FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு | CIVICS -UNIT-2

Thursday 8 November 2018

TNPSC | TRB | TET | CIVICS STUDY MATERIALS | 10 ஆம் வகுப்பு |CIVICS-UNIT-2| மக்களாட்சி – DEMOCRACY

சிறந்த அரசாங்க முறை – மக்களாட்சி முறை / ஜனநாயக முறை.

2500 ஆண்டுகளுக்கு முன் மக்களாட்சி என்ற சொல் முதன் முதலாக யாரால் பயன்படுத்தப்பட்டது – ஹெரோடோட்டஸ்.

ஆங்கிலத்தில் DEMOCRACY என்ற வார்த்தை எம்மொழியிலிருந்து பெறப்பட்டது - கிரேக்கம் ( DEMOS மற்றும் CRATIA )

DEMOS = மக்கள்

CRATIA = அதிகாரம் / ஆட்சி.

மக்கள் நேரடியாகவோ, அல்லது தங்கள் பிரதிநிதிகள் மூலமாகவோ தங்கள் அதிகாரத்தை செலுத்தும் முறை – மக்களாட்சி.

ஜனநாயகம் என்பது “மக்களால் மக்களுக்காக மக்களே ஆட்சி செய்வது” ஆகும் – என்று கூறியவர் – ஆபிரகாம் லிங்கன் ( முன்னாள் அமெரிக்க அதிபர் )

ஜனநாயகம் என்பது – “ஒரு அரசாங்க முறையாகும், இதில் அனைத்து மக்களும் பங்குபெறுகின்றனர் – என்பது யாருடைய கருத்து – பேராசிரியர் ஷீலே.
================================
மக்களாட்சியின் வகைகள்:- இரண்டு வகைப்படும்.

நேரடி மக்களாட்சி

மறைமுக மக்களாட்சி
================================
பண்டைய கிரேக்கம் மற்றும் ரோமானிய நாகரிகத்தில் நடைபெற்றது-நேரடி மக்களாட்சி.
================================
பண்டைய இந்தியாவில், கிராம பஞ்சாயத்து முறையில் நேரடி மக்களாட்சி நடைபெற்றது.
================================
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசாங்கத்தை உருவாக்கி நடத்துவது – மறைமுக மக்களாட்சி.
================================
பெரும்பாலான நாடுகளில் பின்பற்றும் ஆட்சிமுறை – மறைமுக மக்களாட்சி.

அரசியல் கட்சிகள் ஆட்சி முறையில் பங்கு வகிப்பது - மறைமுக மக்களாட்சி.
மக்களட்சியின் நன்மைகள்:-

தற்கால உலகில் எந்த முறை சிறந்த அரசாங்க முறையாக கருதப்படுகிறது – ஜனநாயக முறை.

சிறந்த அரசாங்கம் அமைய வழி வகுக்கிறது.

மக்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.

சமத்துவம் நிலைநாட்டப்படுகிறது.

மக்கள் கல்வியறிவு பெற உதவுகிறது.

நாட்டு நலன் மேம்படுகிறது.

அமைதியான முறையில் அரசாங்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

போர் ஆயுதங்களை நம்பாமல் வாக்குப் பெட்டியை நம்புகிறது.

ஜனநாயக முறையில் புரட்சிகள் மற்றும் கிளர்ச்சிகளுக்கு இடமில்லை.
மக்களாட்சியின் தீமைகள்:-

ஒழுங்கற்ற அரசாங்கம் அமைய வழிவகுக்குகிறது.

தகுதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

மக்கள் பிரதிநிதிகள் பெரும்பாலும் அறியாமை மிக்கவர்களாகவும், தகுதியற்றவர்களாகவும், அனுபவம் அற்றவர்களாகவும் உள்ளனர்.

அதிக செலவினைக் கொண்ட அரசாங்கம் அமைய வழி செய்கிறது.

தனிநபர் அல்லது சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை.

கட்சிமுறை அரசாங்கம் அமைய வழிசெய்கிறது.

வகுப்பு கலவரங்களுக்கு வழிசெய்கிறது.
மக்களாட்சியின் முக்கியத்துவம்:-

மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.

ஜனநாயகத்திற்கு அடிப்படையாக திகழ்வது – சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம்.
அரசியல் கட்சிகள்:-

ஜனநாயக ஆட்சிமுறைக்கு முதன்மையான தேவை – கட்சி.

அரசாங்கம் சுமுகமாக நடைபெற வழிசெய்வது – கட்சி.

பெரும்பான்மை பெற்றுள்ள கட்சியே அரசாங்கத்தை நடத்தும்.

ஒருமித்த கருத்துடைய மக்களால், அரசியல் அதிகாரத்தைப் பெறும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைப்பு – அரசியல் கட்சி.
அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் / கடமைகள்.

பொதுக்கொள்கைகளை உருவாக்குதல்.

தேர்தலில் போட்டியிடுதல்.

மக்களுக்கு கல்வியறிவு புகட்டுதல்.

அரசாங்கத்தை நடத்துவது மற்றும் விமர்சிப்பது.

அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக திகழ்வது.

மக்களை ஒன்று திரட்டுவது அல்லது இணைக்கும் அமைப்பாக செயல்படுவது.
கட்சி முறையின் வகைகள் – மூன்று வகைப்படும்.

ஒரு கட்சி முறை – கியூபா, சீனா.

இரு கட்சி முறை – அமெரிக்கா, இங்கிலாந்து.

பல கட்சி முறை – இந்தியா, பிரான்சு.

அமெரிக்கா - ஜனநாயக கட்சி, குடியரசுக் கட்சி.

இங்கிலாந்து – தொழிலாளர் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி ( பழமைவாத கட்சி ).
================================
இந்திய அரசியல் கட்சிகள்:- ( இரண்டு வகைப்படும் )
தேசிய கட்சிகள்
மாநில கட்சிகள்
================================
தேசிய கட்ட்சிகள்:-

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

மக்களவை தேர்தலில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் போட்டியிட வேண்டும்.

அதில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் ஆறு சதவீத வாக்குகள் பெறும் கட்சிகள் தேசிய கட்சிகள்.

எ.கா - காங்கிரஸ், பா.ஜ.க.
================================
மாநில கட்சிகள் / பிராந்திய கட்சிகள்:-

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

சட்டமன்ற தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் ஆறு சதவீத வாக்குகள் பெறவேண்டும்.

குறைந்தபட்சம் இரண்டு இடங்கள் கைப்பற்றவேண்டும்.

எ.கா – தி.மு.க , அ.தி.மு.க , தே.மு.தி.க , தெலுங்கு தேசம்.
================================
மாநில கட்சிகளின் சின்னங்கள்:-

தி.மு.க – உதய சூரியன்.

அ.தி.மு.க – இரட்டை இலை.

தே.மு.தி.க – முரசு.

தெலுங்கு தேசம் – சைக்கிள்.
================================
தேர்தலில் வாக்களிக்க – 18 வயது.

தேர்தலில் போட்டியிட – 25 வயது.
================================
எல்லா ஜனநாயக நாடுகளும் வயது வந்தோர் வாக்குரிமையை நடைமுறைப்படுத்தி பின்பற்றி வருகிறது.
================================
இந்திய தேர்தல் முறைகள்:-

நேரடித் தேர்தல் முறை

மறைமுக தேர்தல் முறை
================================
குடிமக்கள் தாங்களே நேரடி தேர்தல் மூலம் அல்லது மறைமுகத் தேர்தல் மூலம் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்தியாவில் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தேர்ந்தெடுக்கும் முறை - நேரடித் தேர்தல் முறை

குடிமக்கள் நேரடியாக தங்களது வாக்குகளை செலுத்தாமல், தங்கள் பிரதிநிதிகளைக் கொண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறை - மறைமுக தேர்தல் முறை

எ.கா. – நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர்.
இடைத் தேர்தல்கள்:-

ஒரு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் மரணமடைந்தால் அல்லது பதவியைவிட்டு விலகினால், அந்த தொகுதியில் மட்டும் நடைபெறும் தேர்தல்.
இடைப் பருவத் தேர்தல்கள்:-
 நாடாளுமன்றமோ, மாநில சட்ட மன்றமோ ஐந்தாண்டுகள் செயல்பட முடியாது இடையில் கலைக்கப்பட்டால் அதற்காக தேர்தல் நடத்தப்படுவது.
எதிர்கட்சிகளின் பங்கு:-

மக்களாட்சியின் வெற்றி – எதிர்கட்சிகளின் செயல்பாட்டை பொறுத்து.

எதிர்கட்சித் தலைவர் – ஆளுங்கட்சி அமைச்சருக்கு சமமான அதிகாரம் பெற்றவர் (காபினட் அந்தஸ்து).

ஆளுங்கட்சிகள் ஏதேச்ச அதிகார மனப் பான்மையுடன் செயல்பட்டாமல் இருக்க.

ஆளுங்கட்சிகளின் அதிகாரங்களை வரையறுக்க.

ஆளுங்கட்சிகளை கண்காணிக்க.

ஆளுங்கட்சிகளின் கொள்ககைகளை விமர்சிப்பது முக்கிய பணி.

அரசாங்கத்தின் செலவினங்களை அறிந்துகொள்ள முழு உரிமை பெற்றவை.
தேர்தல் ஆணையம்:-

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்டது.

சுதந்திரமான அமைப்பு.

தலைமையிடம் / அமைந்துள்ள இடம் – புது தில்லி.

நிர்வாச்சன் சதன் [ NARVACHAN SADAN ] என்றும் அழைக்கப்படுகிறது.

மூன்று நபர்களைக் கொண்டது.

ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர் + அவருக்கு இணையான இரண்டு உறுப்பினர்கள் (1+2).

இவர்களின் பதவிக்காலம் – ஆறு ஆண்டுகள்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையான அதிகாரம் பெற்றவர்கள்.

தற்போதய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் - ஓம் பிரகாஷ் ராவத் ( 22வது தலைமை தேர்தல் ஆணையர்)

தலைமை தேர்தல் அதிகாரி:-

ஒவ்வொரு மாநிலத்தில் ஒரு தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளார்.

மாநில அரசாங்கத்தின் ஒப்புதலோடு குடியரசுத்தலைவர் நியமனம் செய்கிறார்.

மாநில தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வது இவரது பணி.

தற்போதய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி -  --------

தேர்தல் ஆணையத்தின் பணிகள்:-

அரசியல் கட்சிகளுக்கு அங்கிகாரம் வழங்குவது.

அரசியல் கட்சிகளுக்கும், தனி வேட்பாளடுக்கும் சின்னம் ஒதுக்குவது.

வாக்களிக்கும் நாள், வாக்கு எண்ணப்படும் நாள் மற்றும் தேர்தல் இறுதி முடிவுகளை அறிவிப்பது.
==============================

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One