Search

TNPSC - DEO போன்ற அரசுத் தேர்வுகளில் ஜெயிக்க இந்த 5 விஷயங்கள் முக்கியம்!

Sunday 3 February 2019


ஒவ்வொரு வருடமும் மத்திய மற்றும் மாநில அரசு பல போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்கிறனர். கண்டிப்பாக விடா முயற்சியும், திட்டமிடுதலும் இருந்தால் போட்டித் தேர்வுகளில் உங்களால் வெற்றி பெற முடியும் என்கிறார் தேனி மாவட்டத்தில், ஏழை மாணவர்களுக்காக போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் தமிழாசிரியர் கோ. செந்தில்குமார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய இந்தத் திண்ணை அமைப்பின் மூலம் இதுவரை 150 -க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை செந்தில்குமாரும், அவரின்  குழுவினரும் உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் சொல்லும் கீழ்காணும் இந்த 5 விஷயங்களை கடைபிடித்தாலே போதும். போட்டித் தேர்வுகளை எளிதில் வெற்றி பெறலாம்.




TNPSC - DEO போட்டித் தேர்வைப் பற்றிய புரிதல்...!
போட்டித் தேர்வுக்கு தயாராவதற்கு முன்பு நம்முடைய கல்வி மற்றும் வயது, தகுதி என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 10, +2 படித்தவர்கள் என்னென்ன போட்டி தேர்வுகளில் பங்கேற்கலாம். பட்டதாரிகள் எந்தெந்த  போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளலாம். வங்கி, ரயில்வே போன்ற துறைகளுக்கான கல்வித் தகுதி என்ன என்பதை எல்லாம் முதலில் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற் போல தயாராவது நல்லது. மொழியறிவும், கல்வித்தகுதிக்கும் ஏற்ப போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு அதில் உள்ள தேர்வு நுணுக்கங்கள் தெரிந்தால் போதும். வெற்றி பெறுவது எளிது.





அடிப்படையாக இந்த மூன்றும் முக்கியம்...!
ரு போட்டித் தேர்வுக்கு தயாராகுவோர், மொழியறிவு நிச்சயமாக பெற்றிருக்க வேண்டும். அதாவது, தாய்மொழி, ஆங்கிலம் மிக அவசியம். ஏனென்றால் பெரும்பாலும் போட்டித் தேர்வுகளில் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தில்தான் கேள்விகள் கேட்கப்படும். குறிப்பாக மொழிப் பாடத்துக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகு, பொது அறிவு மிக மிக முக்கியம். மூன்றாவதாக அடிப்படை கணித அறிவு முக்கியம். இந்த மூன்றும் இருந்தாலே யார் வேண்டுமானாலும் குரூப் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறலாம். பொது அறிவைப் பொறுத்தவரை போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியான உடன் படிக்கத் தொடங்குவது எந்த விதத்திலும் பயன் அளிக்காது. பொது அறிவு குறித்த தேடல்கள் எப்போதும் உங்களுக்குள் இருக்க வேண்டும். இதற்கென தினமும் ஒரு மணி நேரமாவது படிப்பிற்காக ஒதுக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை...!






TNPSC - DEO போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு...!!

நாம் அந்த தேர்வு தகுதியுடன் இருக்கிறோமா என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். முழுமையான தகுதியை பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கவும். அதாவது தற்போது நீங்கள் படித்துக் கொண்டிருந்தாலோ, தேர்வு எழுதி ரிசல்ட் வெளிவராமல் இருந்தாலோ அந்த நேரத்தில் நீங்கள் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பது நல்லது. விண்ணப்பிக்கும் பொழுது உங்களுடைய பிறப்பு தேதி, படிப்பு, எந்த பாடம் என்பதையும் சரியாக நிரப்ப வேண்டும். தேர்வுக்கு எத்தனை முறை விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு  என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.






TNPSC - DEO போட்டித் தேர்வு குறித்த பயத்தை போக்குவது எப்படி...?

இத்தனை லட்சம் பேர் எழுதுகிறார்கள். இவர்களில் நாம் எப்படி எழுதி வெற்றி பெற முடியும் என்கிற பயம் பலருக்கு இருக்கும். எத்தனை லட்சம் பேர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தாலும், கடினமாக உழைக்கக் கூடியவர்கள் அதில் 10 % பேர்தான். குழுவாக படிப்பதுதான் போட்டித் தேர்வுக்கான ஆரோக்கிய படிப்பாகும். குழுவோடு இணைந்து படிக்கும் பொழுது மற்றவர்கள் மூலமாக நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.  சில போட்டித் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் இவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் இருக்கும். நான்கில் ஏதாவது ஒன்றில் நமக்கு குறைந்த அளவே தெரிந்திருக்கும். இதற்கு நீங்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் போதே அதிக அளவு ஈடுபாடு எடுத்து படிக்க ஆரம்பியுங்கள்.






TNPSC - DEO - எதை படிக்கலாம்..? எவ்வளவு நேரம் படிக்கலாம்...?
சந்தையில் போட்டித் தேர்வுகளுக்கென ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்கப்படுகின்றன.  போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகளோ, மெட்டீரியல்களோ வெறும் வழிகாட்டியே தவிர, கேள்வி&பதில்களை அடிக்கடி நீங்களே தயாரித்து அதற்கான மாதிரி தேர்வுகளை நீங்களே எழுதிப் பார்க்கலாம். சராசரியாக ஒரு நாளைக்கு முழு மனதோடு இரண்டு முதல் மூன்று மணி நேரம் படித்தாலே போதும். சராசரி மதிப்பெண் பெற்ற மாணவன் என்னால் வெற்றி பெற முடியுமா என நிறைய பேர் கேட்கிறார்கள். பள்ளி, கல்லூரியில் எடுத்திருக்கும் மதிப்பெண்னை வைத்து போட்டித் தேர்வுகளை மதிப்பிட வேண்டாம். தங்க மெடல் பெற்றவர்கள் கூட 10 முறை போட்டித் தேர்வுகளில் முயற்சித்தும் தோல்வியடைந்தவர்கள் நிறைய பேர் உண்டு.
பொருளாதார சூழ்நிலையோ, சமூகக் காரணியோ உங்கள் முயற்சியை தடுக்க முடியாது. உங்கள் முயற்சி மட்டுமே உங்களுக்கான வெற்றியைத் தரும். நீங்கள் வெற்றி பெற்றால், அதற்கு பல பேர் காரணமாக இருக்கலாம்  தோல்வியுற்றால் நீங்கள் மட்டும்தான் காரணம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். வெற்றி பெற TNPSCTRB -யின் மனமார்ந்த வாழ்த்துக்கள்'.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One