![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRZxSUfBaJ-lbq6q7_tXoHl6CXLwcv1DEOJUKn_lysoT5IgINH1pNHACXvBaqILVbavZE5aUMDfcTc-1pylOb7wAJN-jtUXCIe0aHqyGro_3uIRW-d_fjNIu4vZl_JA4MIDN1tF2V3OGYj/s1600/FB_IMG_1580477478447.jpg)
முட்டைக்கோஸ் பல நூற்றாண்டாக மூட்டு வலியை சரிசெய்யும் நிவாரணியாக செயல்பட்டு வருகிறது.
இதற்கு காரணம் இதில் உள்ள வைட்டமின், பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள்,க்ளூட்டமைன், ஆந்தோசையனின்கள் ஆகியவை தான் காரணம்.
காய்கறிகளில் மிகவும் உட்டச்சத்து மிகுந்த காய்கறி முட்டைகோஸ்.
இதில் வைட்டமின் சி, கே மற்றும் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது.
அதோடு இதில் புற்றுநோயை எதிர்க்கும் பொருட்களும், அலற்ஜி நிவாரணியாக மூட்டு வலியை குறைக்கு வலியுள்ள பகுதியில் சுற்று கட்டினால் வலி பறந்து போய்விடும். இதற்கான செயல்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
முட்டைக்கோஸ்
அலுமினிய தகடு
பூரிக்கட்டை
பேண்டேஜ்
ஓவன்
முட்டை கோஸ் இலையை நன்கு கழுவி, உலர வைத்து அதை சாறு வெளியேறும் வரை பூரி கட்டையால் தேய்க்க வேண்டும்.
பின்னர் முட்டைக் கோஸை அலுமினியத் தட்டில் விரித்து. ஓவனில் சில நிமிடம் வெதுவெதுப்பாக சூடேற்ற வேண்டும். பின் வலியுள்ள இடத்தில் வைத்து பேண்டேஜின் உதவியால் கட்ட வேண்டும்.
இப்படி 1 மணி நேரம் கட்டி வைத்த பின் கழற்ற வேண்டும். ஒரு நாளைக்கு 3 முறை இது போன்று புதிய முட்டைக் கோஸ் இலைகளை வைத்து செய்துவந்தால் நல்ல மாற்றம் காணலாம்.
சிகப்பு முட்டைக்கோஸ்:-
பச்சை முட்டைக்கோஸை விட, சிவப்பு முட்டைக்கோஸில் ஆந்தோசையனின்கள் சத்து அதிக அளவில் உள்ளது. எனவே இந்த வகை முட்டைக்கோஸ் கிடைத்தால் பயன்படுத்துங்கள்.
No comments:
Post a Comment