Search

Budget 2020 - மத்திய பட்ஜெட் முக்கிய சிறப்பம்சங்கள் ( Live update )

Saturday 1 February 2020

நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான ( 2020 - 2021 ) மத்திய பட்ஜெட்டை இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட் 2020 - முக்கிய சிறப்பம்சங்கள் :

கல்வித்துறை 

⭕ கல்விக்கு ரூ.99,300 கோடி நிதி ஒதுக்கீடு

⭕ புதிய கல்விக் கொள்கை விரைவில் அமல்படுத்தப்படும்.

⭕ மாவட்டந்தோறும் தனியாருடன் இண்ந்து மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை

⭕ கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீடுக்கு அனுமதி அளிக்கப்படும்.

⭕ ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் பெண் குழந்தைகள் அதிகமாக சேர்ப்பு

⭕ அங்கன்வாடி ஊழியர்களுக்கு செல்போன்

வருமான வரி சலுகை

Soon....

பிற துறைகளுக்கு

⭕ உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உள்ளது

⭕ இந்திய அரசின் அன்னிய கடன் மொத்த உற்பத்தி மதிப்பில் 48.7 சதவீதமாக குறைந்துள்ளது

⭕ 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் 2 மடங்காகும்

⭕ விவசாய வளர்ச்சிக்கு 16 அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்படும்

⭕ 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய பம்ப் செட்டுகள் மற்றும் வறண்ட நிலங்களில் சூரிய மின் உற்பத்தி திட்டம்

⭕ அனைவரும் சுகாதாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது பட்ஜெட்டின் குறிக்கோள்

⭕ அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டத்தால் விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது

⭕ விவசாயிகளுக்காக கிசான் ரயில் அறிமுகப்படுத்தப்படும்

⭕ கிராமங்களில் உணவு தானி சேமிப்பு கிடங்குகள் அமைக்க திட்டம்

⭕ மகளிர் சுய உதவி குழுக்கள் முத்ரா திட்டத்தின் மூலம் சேமிப்பு கிடங்குகளை அமைக்க ஏற்பாடு செய்யப்படும்

⭕ நபார்டு மூலமாக நிதி உதவி அளித்து கிராமங்களில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்

⭕ மீன் உற்பத்தியை 200 லட்சம் டன்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

⭕ விளை பொருட்களை கொண்டு செய்வதற்காக தனி விமானம் இயக்கப்படும்

⭕ விவசாயிகளுக்கு கடன் வழங்க 15 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய இலக்கு

⭕ தான்ய லக்‌ஷ்மி திட்டம் - விவசாயத்தில் பெண்களை ஈடுபடுத்த ஊக்கப்படுத்தும் திட்டம் அறிவிப்பு

⭕ தேவைக்கு ஏற்ப உரப்பயன்பாட்டை ஊக்குவிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்

⭕ 2021-ல் 108 மில்லியன் மெட்ரிக் பால் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

⭕ 2025-க்குள் கால் நடைகளை தாக்கும் கோமாரி நோய் ஒழிக்கப்படும்

⭕ தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.12,300 கோடி ஒதுக்கீடு

⭕ 150 உயர்கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும்

⭕ ஊரக மேம்பாடு, நீர்பாசனம் உள்ளிட்ட திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.2.83 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

⭕ கல்விக்கு ரூ.99,300 கோடி நிதி ஒதுக்கீடு

⭕ திறன் மேம்பாட்டுக்கு ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கீடு

⭕ சுகாதாரத்திற்கு ரூ.69,000 கோடி ஒதுக்கீடு

⭕ அரசு - தனியார் பங்களிப்புடன் மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்

⭕ தேசிய போலீஸ் பல்கலை கழகம் அமைக்கப்படும்

⭕ ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி

⭕ மருத்துவ மின் உபகரணங்களை உற்பத்தி செய்பவர்கள் ஊக்கப்படுத்தப்படுவார்கள்

⭕ 2025-ம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை

⭕ மொபைல் போன், செமி கண்டக்டர் உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்

⭕ 5 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படும்

⭕ ஒவ்வொரு மாவட்டமும் ஏற்றுமதி மையமாக்கப்படும்

⭕ தொழிலதிபர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்க தனி ஏற்பாடு

⭕ முதலீட்டுக்கு விரைந்து அனுமதி அளிக்க சிறப்பு குழு அமைக்கப்படும்

⭕ அடுத்த 5 ஆண்டுகளில் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களில் ரூ.103 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்

⭕ 27,000 கிலோ மீட்டர் ரயில்பாதை மின்மயமாக்கப்படும்

⭕ சென்னை - பெங்களூரு வரைவு சாலை திட்டம்

⭕ ரூ.18,600 கோடியில் பெங்களூரு புறநகர் ரயில் போக்குவரத்து

⭕ கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு கடந்த ஆண்டைவிட இந்த பட்ஜெட்டில் அதிகம் நிதி ஒதுக்கீடு

⭕ ரயில்பாதை ஓரங்களில் சூரிய மின்சக்தி திட்டம் பரிசீலிக்கப்படும்

⭕ ரயில் நிலையங்களில் வை-பை இணைய சேவை

⭕ 2024-க்குள் 100 விமான நிலையங்கள் கட்டப்படும்

⭕ போக்குவரத்து கட்டமைப்புக்காக ரூ.1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு

⭕ தேஜஸ் ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

⭕ 150 ரயில்கள் தனியார் மயம் ஒப்படைக்கப்படும்

⭕ ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு இணையதள வசதி

⭕ பாரத் நெட் இணையதள இணைப்பு திட்டத்துக்கு ரூ.6000 கோடி ஒதுக்கீடு

⭕ கண்ணாடி இழை தொடர்புகள் மூலம் ஒரு லட்சம் கிராமங்கள் இணைக்கப்படும்

⭕ ஊட்டச்சத்து திட்டத்திற்கு ரூ.35,600 கோடி ஒதுக்கீடு

⭕ பெண்கள் நலனுக்கு ரூ.28,600 கோடி ஒதுக்கீடு

⭕ ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் பெண் குழந்தைகள் அதிகமாக சேர்ப்பு

⭕ அங்கன்வாடி ஊழியர்களுக்கு செல்போன்

⭕ ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படும்

⭕ மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்க திட்டம் வகுக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படும்

⭕ கலாச்சார துறைக்கு ரூ.3,150 கோடி நிதி ஒதுக்கீடு

⭕ சுற்றுலா வளர்ச்சி துறைக்கு ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு

⭕ நாட்டில் 5 இடங்களில் தொல்பொருள் ஆய்வு மையம் அமைக்கப்படும்

⭕ பழைய அனல்மின் நிலையங்களை மூட அறிவுறுத்தப்படும்

⭕ பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

⭕ காற்றில் உள்ள கார்பன் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

⭕ ரூ.4,400 கோடியில் காற்றை தூய்மைப்படுத்த திட்டம்

⭕ தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதே முக்கிய நோக்கம்

⭕ தூய்மையான ஆட்சி மற்றும் ஊழலற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது

⭕ வரி வசூல் என்ற பெயரில் நடத்தப்படும் துன்புறுத்தல்களுக்கு தீர்வு காணப்படும்

⭕ வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணம் திருடு போனால், கிடைக்கும் காப்பீடு பணம் ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

⭕ 2022-ம் ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள ஜி20 மாநாட்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

⭕ ஜம்மு காஷ்மீருக்கு ரூ.30,757 கோடி ஒதுக்கீடு

⭕ லடாக் யூனியன் பிரதேசத்துக்கு ரூ.5,958 கோடி நிதி ஒதுக்கீடு

⭕ மத்திய அரசு வேலைக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படும்

⭕ தேசிய வேலைவாய்ப்பு தேர்வு முகமை கொண்டு வரப்படும்

⭕ வங்கிகளின் வெளிப்படைத்தன்மை காக்கப்படும்

⭕ எரிசக்தி துறைக்கு ரூ.22,000 கோடி நிதி ஒதுக்கீடு

⭕ ஐடிபிஐ அரசு வங்கி பங்குகள் விற்கப்படும்

⭕ பொதுத்துறை வங்கிகளின் மூலதன கட்டமைப்பை மேம்படுத்த ரூ.3.5 லட்சம் கோடி வழங்கப்படும்

⭕ வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது

⭕ எல்ஐசி நிறுவனத்தில் உள்ள ஒரு பகுதி பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One