Search

பள்ளிக்கல்வித்துறை சார்பாக TNTP இணைய தளத்தை சிறப்பாக பயன்படுத்தும் மற்றும் பங்களிப்பை வழங்கும் ஆசிரியர்களுக்கு பாராட்டு முத்திரைகள்

Monday 8 June 2020



TNTP இணைய தளம் கடந்த 2019 -ம் ஆண்டு ஜூலை மாதம் 7 -ம் தேதி அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டு, தனது முதல் ஆண்டு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய உள்ளது.

இதன் பொருட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பாக TNTP இணைய தளத்தை சிறப்பாக பயன்படுத்தும் மற்றும் பங்களிப்பை வழங்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக  தொடங்கப்பட்ட பாராட்டு முத்திரைகள் வழங்கும் திட்டத்தின் முதல் நிகழ்வாக இதுவரை தானாக முன் வந்து தங்களை பயனர்களாக இணைத்துக் கொண்ட 2.6 இலட்சம் ஆசிரியர்களுக்கு சிறப்பான தொடக்கத்திற்கான முத்திரை வழங்கப்பட்டுள்ளது.

இதனை ஆசிரியர்கள் பலர் வரவேற்க்கும் விதமாக சமுகவலைதளங்களில் பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளனர்.

இதுவரை தங்களை இணைத்துக்கொள்ளாத ஆசிரியர்கள் உடனடியாக தங்களை இணைத்துக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One