Search

VERY IMPORTANT 100 QUESTION AND ANSWERS FOR TNPSC GROUP2 | GORUP4 | VAO 2018

Friday 24 August 2018

  1. கலம்பகத்தின் உறுப்புகள் – கலம் -12, பகம் – 6, மொத்தம் = 18
  2.  சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை – 96 வகை
  3.  ஐந்தமிழ் – இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஆய்வுத் தமிழ்.
  4. மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் – ஊக்கமுடைமை.
  5.  நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் – 19.10.1988.
  6. அகத்திணை – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
  7. புறந்திணை – வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்
  8. கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் – பாரதிதாசன்
  9.  வைக்கம் வீரர் -பெரியார்
  10.  யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றனார்.
  11. ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் – கால்டுவெல்
  12. வெகுளி என்ற சொல்லின் பொருள் – கோபம் (அ) சினம்
  13.  விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா? – ஒளி
  14. குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் – 205 புலவர்கள்
  15.  குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் – கபிலர்
  16.  குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை – 402 பாடல்கள்
  17. புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் – ஜி.யூ.போப்
  18.  புறநானூறு இடம் பெறும் தொகுப்பு – எட்டுத்தொகை
  19. சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் – அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
  20. சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் – பாண்டியன் நன்மாறன்
  21. எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? – மீனாட்சியம்மை குறம்
  22. குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் – கந்தர் கலிவெண்பா
  23. குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் – திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்
  24.  குமரகுருபரரின் காலம் – 17-ம் நூற்றாண்டு
  25.  குமரகுருபரரின் பெற்றோர் – சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்
  26.  குமரகுருபரர் பிறந்த இடம் – திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)
  27. திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது – திருக்குற்றால மலை
  28. மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் – குமரகுருபரர்
  29.  குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார் – குறத்தி
  30. குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் – சிற்றிலக்கியம்
  31.  குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் – திருக்குற்றால நாதர் (சித்திர சபை)
  32. குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் – திரிகூட ராசப்பக் கவிராயர்
  33.  நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் – நந்திவர்ம பல்லவன்
  34.  நந்தித் கலம்பகத்தின் காலம் – கி.பி.9-ம் நூற்றாண்டு.
  35. நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் – ஆசிரியர் பெயர் இல்லை
  36.  காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது – அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.
  37. அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் – சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.
  38.  அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861
  39. அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் – கழுகுமலை முருகப் பெருமான்
  40. அண்ணாமலை ரெட்டியார் ஊர் – சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)
  41. காவடிச் சிந்துவின் ஆசிரியர் – அண்ணாமலை ரெட்டியார்
  42. மூவேந்தர் – சேரர், சோழர், பாண்டியர்
  43.  நான்கு வேதங்கள் – ரிக், யஜீர், சாமம், அதர்வணம்
  44. அறுசுவை என்பவை – கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு
  45. ஏழு கடல்கள் – உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.
  46. நவரசம் என்பவை – நகைப்பு, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி(சினம்), உவகை. சாந்தம்.
  47. ஐந்திலக்கணம் என்பவை – எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
  48. எண் வகை மெய்ப்பாடுகள் எவை – நகைப்பு, அழுகை, இளிவு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.
  49.  ராமானுஜம் எழுத்தராக பணியாற்றிய இடம் – துறைமுகம்
  50.  ராமானுஜர் உயர்கல்விக்காக சென்ற நாடு – இங்கிலாந்து

  51.  பசிவந்தால் பத்தும் பறந்து போகும் அந்த பத்து – மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காதல் வேட்கை முதலியன.
  52. புலி தங்கிச் சென்ற குகை போன்றது – வீரத் தாயின் வயிறு
  53.  நீர் வழிப் படூம் புணை போல் – ஊழ்வழிச் செல்லும் உயிர்
  54. கதிரவனைக் கண்ட தாமரை போல – மகிழ்ச்சி
  55. தணலிலிட்ட மெழுகு போல – கரைதல்
  56.  உடுக்கை இழந்தவன் கைபோல – இடுக்கண் களைபவர்
  57.  தாயுமானவர் பாடல்கள் – தமிழ்மொழியின் உபநிடதம்
  58. சிலப்பதிகாரம் – ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம்
  59. சீவகசிந்தாமணி – மணநூல்
  60. கம்பராமாயணம் – இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம்
  61. அகநானூறு – நெடுந்தொகை
  62.  பழமொழி – முதுமொழி
  63. பெரிய புராணம் – திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம்
  64. இலக்கண விள்க்கம் – குட்டித் தொல்காப்பியம்
  65. பட்டிணப்பாலை – வஞ்சி நெடும்பாட்டு
  66. கலித்தொகை – கற்றறிந்தோர் ஏத்தும் தொகை
  67. புறநானூறு – தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்
  68. பெரும்பாணாற்றுப்படை – பாணாறு
  69.  மலைபடும்கடாம் – கூத்தராற்றுப்படை
  70.  முல்லைப்பாட்டு – பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை
  71. குறிஞ்சிப் பாட்டு – காப்பியப்பாட்டு
  72.  வெற்றிவேற்கை – நறுத்தொகை
  73.  மூதுரை – வாக்குண்டாம்
  74. பெருங்கதை – கொங்குவேள் மாக்கதை, அகவற்காப்பியம்
  75. சிலப்பதிகாரம் – இரட்டைகாப்பியங்கள்
  76.  மணிமேகலை – மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம்
  77.  நீலகேசி – நீலகேசித்தெருட்டு
  78.  தாயைக் கண்ட சேயைப் போல – மகிழ்ச்சி
  79.  இலைமறை காய் போல் – மறைபொருள்
  80.  மழைமுகம் காணாப் பயிர் போல – வாட்டம்
  81.  விழலுக்கு இறைத்த நீர் போல – பயனற்றது
  82.  சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல – மிக்க மகிழ்வு
  83. மோசிக்கீரனார் உடல் சோர்வால் முரசுக் கட்டிலில் தூங்கியபோது கவரி வீசிய மன்னன் – சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
  84. நெல்லும் உயிரன்றே என்னும் பாடலை பாடியவர் – மோசிக்கீரனார் முதுமொழிக் காஞ்சியில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை – 10
  85. முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் – மதுரை கூடலூர் கிழார்
  86.  கற்றலை விட சிறந்தது – ஒழுக்கமுடைமை
  87. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த ஆண்டு – 1815
  88.  வனப்பு என்ற சொல்லின் பொருள் – அழகு
  89.  “நில்லாமையுள்ளும் நெறிப்பாடும்” என்னும் வரியில் “வழி” என்பதன் பொருள் – உள்
  90.  “பால் பற்றி செல்லா விடுதலும்” என்னும் வரியில் “பால்” என்பதன் பொருள் – ஒருபக்க சார்பு பற்றி
  91. காளமேகப் புலவர் பிறந்த ஊர் – நந்திக்கிராமம்
  92.  சென்னை துறைமுகம் சார்பில் குடிநீர் கப்பலுக்கு பெயர் – சீனிவாச ராமானுஜம்
  93.  இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
  94. இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் – பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
  95. பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் – ஜான் பன்யன்
  96. இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் – ஆன்மஈடேற்றம்
  97. இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது – ஐந்து
  98. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் – ஹென்றி ஆல்பர்ட்
  99.  கம்பரை ஆதரித்த வள்ளல் – சடையப்ப வள்ளல்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One