Search

ஔவையார் ஆத்திச்சுடி பொருளுடன்

Friday 24 August 2018


1. அறம் செய விரும்பு
பொருள் : நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.


2. ஆறுவது சினம்
பொருள் : கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.

3. இயல்வது கரவேல்
பொருள் : உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.

4. ஈவது விலக்கேல்
பொருள் : ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே

5. உடையது விளம்பேல்
பொருள் : உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.

6. ஊக்கமது கைவிடேல்
பொருள் : எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

7. எண் எழுத்து இகழேல்
பொருள் : எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.

8. ஏற்பது இகழ்ச்சி
பொருள் : இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.

9. ஐயம் இட்டு உண்
பொருள் : யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுகு
பொருள் : உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.

11. ஓதுவது ஒழியேல்
பொருள் : நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல்
பொருள் : ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

13. அஃகஞ் சுருக்கேல்
பொருள் : அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.


14. கண்டொன்று சொல்லேல்.
பொருள் : கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.

15. ஙப் போல் வளை.
பொருள் : 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.

"ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

16. சனி நீராடு.
பொருள் : சனி(குளிர்ந்த) நீராடு.

17. ஞயம்பட உரை.
பொருள் : கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.

18. இடம்பட வீடு எடேல்.
பொருள் : உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.

19. இணக்கம் அறிந்து இணங்கு.
பொருள் : ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.

20. தந்தை தாய்ப் பேண்.
பொருள் : உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.

21. நன்றி மறவேல்.
பொருள் : ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.

22. பருவத்தே பயிர் செய்.
பொருள் : எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.

23. மண் பறித்து உண்ணேல்.
பொருள் : பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே

(அல்லது)
நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)


24. இயல்பு அலாதன செய்யேல்.
பொருள் : நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.

25. அரவம் ஆட்டேல்.
பொருள் : பாம்புகளை பிடித்து விளையாடாதே.

26. இலவம் பஞ்சில் துயில்.
பொருள் : 'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு

27. வஞ்சகம் பேசேல்.
பொருள் : கபடச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே

28. அழகு அலாதன செய்யேல்.
பொருள் : இழிவான செயல்களை செய்யாதே

29. இளமையில் கல்.
பொருள் : இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை (இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.

30. அறனை மறவேல்.
பொருள் : தருமத்தை எப்போதும் மறவாமல் செய்

31. அனந்தல் ஆடேல்.
பொருள் : மிகுதியாக தூங்காதே


32. கடிவது மற
பொருள் : யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.

33. காப்பது விரதம்
பொருள் : தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும்

(அல்லது)

பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.

34. கிழமை பட வாழ்
பொருள் : உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்

35. கீழ்மை யகற்று
பொருள் : இழிவான குணஞ் செயல்களை நீக்கு

36. குணமது கைவிடேல்
பொருள் : நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).

37. கூடிப் பிரியேல்
பொருள் : நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே

38. கெடுப்ப தொழி
பொருள் : பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.

39. கேள்வி முயல்
பொருள் : கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்

40. கைவினை கரவேல்
பொருள் : உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.

41. கொள்ளை விரும்பேல்
பொருள் : பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.

42. கோதாட் டொழி
பொருள் : குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)

43. கௌவை அகற்று
பொருள் : வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு

44. சக்கர நெறி நில்
பொருள் : தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும். (அரசன் = ஆள்பவர், தலைவர்)

45. சான்றோ ரினத்திரு
பொருள் : அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.

46. சித்திரம் பேசேல்
பொருள் : பொய்யான வார்தைகளை மெய் போலப் பேசாதே

47. சீர்மை மறவேல்
பொருள் : புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.

48. சுளிக்கச் சொல்லேல்
பொருள் : கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்

49. சூது விரும்பேல்
பொருள் : ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.

50. செய்வன திருந்தச் செய்
பொருள் : செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்

51. சேரிடமறிந்து சேர்
பொருள் : நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.

52. சையெனத் திரியேல்
பொருள் : பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே

53. சொற்சோர்வு படேல்
பொருள் : பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே

54. சோம்பித் திரியேல்
பொருள் : முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

55. தக்கோ னெனத்திரி
பொருள் : பெரியோர்கள் உன்னைத் தக்கவன் (யோக்கியன், நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்

56. தானமது விரும்பு
பொருள் : யாசிப்பவர்களுக்கு தானம் செய்.

57. திருமாலுக்கு அடிமை செய்
பொருள் : நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்

58. தீவினை யகற்று
பொருள் : பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.

59. துன்பத்திற் கிடங்கொடேல்
பொருள் : முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.

60. தூக்கி வினைசெய்
பொருள் : ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்

61. தெய்வ மிகழேல்
பொருள் : கடவுளை பழிக்காதே.

62. தேசத்தோ டொத்துவாழ்
பொருள் : உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்

63. தையல்சொல் கேளேல்
பொருள் : மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

64. தொன்மை மறவேல்
பொருள் : பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே.

65. தோற்பன தொடரேல்
பொருள் : ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.



No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One